NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

13 வயதுடைய மாணவியை வன்புணர்ந்த  சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது!

நோட்டன் பகுதியில் 13 வயதுடைய மாணவியை வன்புணர்ந்த  சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நோட்டன் பகுதியில் நேற்று முன்தினம்(30) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நோட்டன் பகுதியில் உள்ள பாடசாலை செல்லும் மாணவி ஒருவர் கடந்த 30 திகதி வன்புணர்வுக்குள்ளாகி உள்ளதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து நோட்டன் பொலிசார் 42 வயது உடைய அவரது மாமாவை கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தது.

அதேவேளை, மாணவி கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக நோட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share:

Related Articles