நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.