NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

14 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பெண் கைது.!

கற்பிட்டி – கண்டக்குளி வெல்ல பகுதியில் 14 வயதுடைய மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண்ணொருவரை நேற்று முன்தினம் (17) கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிப்பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவன் பாடசாலை விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்திருந்த நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபரான பெண்ணை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண் பாதிக்கப்பட்ட அந்த மாணவனின் உறவினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவர் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles