(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பஸ்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இன்று (24) காலை முதல் இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
260ஆம் இலக்க பஸ்களை 155ஆம் இலக்க பஸ் வீதியில் சேவையில் ஈடுபடுத்த மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிததே இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.