NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

16 வயது பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு!

ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் வன்புனர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகெட பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 5 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

கூட்டு பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட மாணவி நேற்றையதினம் தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஜந்து இளைஞர்கள், மாணவியை பலாத்தகாரமாக ஏற்றிச்சென்று ,பாழைடைந்த கட்டிடம் ஒன்றினுள் வைத்தே கூட்டுப் பாலியல் வன்புனர்வை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் , சம்பவம் தொடர்பில் ஏனைய இளைஞர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles