NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் இன்று!

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

அதன்படி, இம்முறை 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், ஒரு கோடியிலே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 13421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளதுடன், தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன.

22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள், கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, வாக்கெடுப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறும் வலியுறுத்தப்படுகிறது.

Share:

Related Articles