NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

3500 ரூபாய் பணத்திற்காக நண்பனையே கொலை செய்த நபர்…!

3,500 ரூபாவை தனது நண்பனிடம் கடனாக கொடுத்ததை திருப்பி வாங்கும் சந்தர்ப்பத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நண்பனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சபுகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (29) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

சம்பவத்தில் தாக்கப்பட்டவர் காயமடைந்த நிலையில் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles