NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

372 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் – கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பாரிய நெருக்கடி

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

372 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் மேலும் 400-500 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேசிய வைத்தியசாலையின் தாதியர்களின் எண்ணிக்கை சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளதுடன் தற்போது தேசிய வைத்தியசாலையில் சுமார் 2,400 தாதி உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலைமையினால் தேசிய வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனால் பல்வேறு திணைக்களங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு படுக்கைக்கு ஒரு தாதி இருக்க வேண்டும் என்பது பொதுவான வடிவமைப்பாக இருந்தாலும், தற்போது இரண்டு படுக்கைகளுக்கு ஒரு தாதி மட்டுமே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles