NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

8 வயது சிறுவனை துஷ்பிரயோகம்செய்த 15 வயது சிறுவன்…!

வவுனியாவில் 8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிவடைந்து குறித்த சிறுவன் மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற போது அப் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (27) மாலை 15 வயது சிறுவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, 8 வயது சிறுவன் வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பொலஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles