யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் , தோணிகல பகுதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் , வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தநிலையில் மின்கம்பம் சேதமடைந்ததையடுத்து அப்பகுதியில் 10 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து இப்பலோகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.