NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Alliance Finance கம்பனியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கான வனத்திட்டம்!

Alliance Finance கம்பனி (AFC) இலங்கையில் சுற்றாடல் பாதுகாப்பை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

‘AFC Hapannu Forest’ என்ற திட்டம் என்பது நிறுவனத்தின் குழந்தை காப்பாளர்களால் உருவாக்கப்பட்டு, எதிர்கால சந்ததியினருக்காக அர்ப்பணிக்கப்பட்ட வனமாகும்.

கண்டி மாவட்டத்தின் மைலப்பிட்டிய தெற்கில் உள்ள மைலப்பிட்டி ரணவிரு நினைவுக் கோபுரத்திற்கு அருகாமையில் ‘AFC Hapannu Forest’ உருவாக்கப்படவுள்ளது.

கொழும்பில் இருந்து கொழும்பு கண்டி வழித்தடத்தில் சுமார் 163 கிலோமீற்றர் தொலைவிலும், ஹரகமரந்தேனிகல பாதை ஊடாக கண்டியிலிருந்து 20.2 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள இலங்கை வனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலப்பரப்பு இவர்களது திட்டத்தளமாகும்.

கண்டி மாவட்ட வன அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வனப் பாதுகாவலரின் கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

மரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நன்மைகளைப் பற்றி இளைஞர்களுக்குக் கற்பிப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதேநேரத்தில் எதிர்காலத்திற்காக சேமிக்க அவர்களை ஊக்குவிப்பதாகும். மைலபிட்டியஇ துல்கொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து காடுகளினால் வழங்கப்படும் கல்வி வாய்ப்புகளால் பயனடைவார்கள் என AFC நம்புகிறது.

குழந்தைகள் இயற்கையோடு இணைவதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் பொறுப்பு மற்றும் மதிப்பைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் காடு ஒரு தனித்துவமான வழியாகும். மே 9இ 2023 அன்று பhடசாலை மாணவர்கள்இ கண்டி மாவட்ட வன அதிகாரிகள்இ பொலிஸ் அதிகாரிகள்இ மதத் தலைவர்கள் மற்றும் பிறரின் பங்கேற்புடன் 100 மரங்கள் நடும் நிகழ்ச்சியுடன் திட்டம் தொடங்கியது. முதல் ஆண்டில் AFC இன் நிதியுதவியுடன், நியமிக்கப்பட்ட 8 ஹெக்டேர் பரப்பளவில் 4,000க்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டன.

தற்போது, ​​9 ஹெக்டேர் பரப்பளவில் 5,400 செடிகளை நடுவதற்கு நிதியுதவி அளித்து இரண்டாம் கட்ட திட்டத்திற்கு AFC ஆதரவு அளித்து வருகிறது.

முன்முயற்சியின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் அமைப்பில் காடுகள் வகிக்கும் முக்கிய பங்கைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலா மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது தேசிய கார்பன் தடயத்தை குறைப்பதில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் திட்டம் 1.33 மில்லியன் AFC மரம் நடும் திட்டத்தையும் ஆதரிக்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த முயற்சியின் ஒரு பகுதியாக AFC 730,000 க்கும் மேற்பட்ட மரங்களை வெற்றிகரமாக நட்டுள்ளது.

அலையன்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனம், சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை சூழலை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தன்னிடம் உள்ள ஒவ்வொரு குழந்தை கணக்கு வைத்திருப்பவருக்கும் ஒரு மரத்தை நடுவதற்கு உறுதியளித்துள்ளது. இந்நிறுவனம் இப்பகுதிகளில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் அதே வேளையில்இ நீரைப் பாதுகாப்பதற்கும் பிராந்தியத்தின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும் முயற்சிகளை ஆதரிக்கும்.

குறிப்பாக, நிறுவனம் விக்டோரியா-ரந்தேனிகல நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கவனம் செலுத்தும், இது பிராந்தியத்திற்கு முக்கியமான நீர் ஆதாரமாகும். இந்த முன்முயற்சியின் மூலம், அலையன்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதையும், எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான மற்றும் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles