மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவாகியுள்ளதாகவும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் அப்பணியகம் கூறியுள்ளது.