அபுதாபியில் MERS-CoV என்ற மிகவும் ஆபத்தான தொற்றுவகையின் பாதிப்பு நேற்று (ஜூலை 24) பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞர் ஒருவருக்கு, Middle East Respiratory Syndrome – Coronavirus (MERS-CoV) என்ற கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கொவிட்-19 தொற்றை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த நபருடன் தொடர்பில் இருந்த 108 பேரின் பட்டியலை விரிவாக சரிபார்த்த போதிலும், WHO வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான எந்த தொடர்பையும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
⚠️ BREAKING: Killer coronavirus outbreak fears as man, 28, gets struck down with MERS in Abu Dhabi – and doctors are baffled as to how he caught it@ejustin46 @DavidJoffe64 @LauraMiers @RajlabN pic.twitter.com/Su9U3UPHNQ
— SARS‑CoV‑2 (COVID-19) (@COVID19_disease) July 25, 2023
இந்த வைரஸ் முக்கியமாக ஒட்டகம் போன்ற விலங்குகளிடம் இருந்து பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும், பாதிக்கப்பட்ட குறித்த நபர் ஒட்டகங்களுடன் தொடர்பு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.