NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கம் – முன்னாள் போராளிகள்!

தங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கமாக இருப்பதாக முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சை குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட சுயேட்சைக் குழுவானது அரிக்கன் இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகசந்திப்பு நேற்று வவுனியாவில் இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

வன்னியில் அவையவங்களை இழந்த பலபோராளிகள் உள்ளதாகவும், அன்றாட உணவுக்கே அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அநாதைகளாக உள்ள அவர்களை இந்த அரசியல் வாதிகள் யாருமே கண்டுகொள்வதில்லை எனவும் கூறியுள்ளனர்.

தம்மை வைத்து வியாபாரம் செய்வதே அவர்களது நோக்கம் எனவும், நேரடியாக பாதிக்கப்பட்ட தமக்கே அந்த விடயங்கள் புரியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே எமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த தேர்தலில் தாம் போட்டியிடுகின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles