NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடக்கு மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் புகையிரத சேவைகள்!

வடக்கு புகையிரத மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் புகையிரத சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, யாழ்தேவி புகையிரதத்தை அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் அந்தத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு புகையிரத மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது புகையிரதச் சேவை முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles