NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றும் நாளையும் சிறப்பு புகையிரதங்கள் சேவையில்..!

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக 7 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் வழக்கமான புகையிரத சேவைக்கு மேலதிகமாக சில சிறப்பு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பெலியத்தவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட புகையிரத சேவைகள் இயங்குகின்றன.

அத்துடன், கொழும்பு கோட்டையிலிருந்து ஹிக்கடுவை வரையிலும், மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles