பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உத்திக பிரேமரத்ன அநுராதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு திரும்பிய சிறிது நேரத்திலேயே வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரது வாகனத்தின் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் அவர் காயமின்றி தப்பியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.