பதுளை – எல்ல வெல்லவாய பகுதியில் நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 5 கிலோமீற்றர் தூரத்திற்கு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இதனால் குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.