NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் மலேசியாவிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபரை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்த பெண்ணொருவரும் ஆண் ஒருவரும், சந்தேகநபருக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles