NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒன்பது நாட்களில் 1,050 டெங்கு நோயாளர்கள் அடையாளம்..!

நாட்டில் கடந்த ஒன்பது நாட்களில் 1,050 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 33,795 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் இதுவரையில் அதிகளவாக 13,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவ் ஆண்டு இதுவரை டெங்கு நோயால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share:

Related Articles