NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து – மூவர் காயம்..!

பசறை பிபிலை வீதியில் இன்று காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து லுணுகலை நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles