NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!

குளவி கொட்டுக்கு இலக்கான 8 ஆண்கள் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

தோட்ட பணியில் ஈடுபட்டு இருந்த வேளையிலேயே இந்த எட்டு ஆண் தொழிலாளர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் முற்பகல் 10 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளதுடன் தற்போது வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles