NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 14 மீனவர்களும் காங்கேசன்தறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 14 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Share:

Related Articles