NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுற்றுலா சென்ற பாடசாலை பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழப்பு..!

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுதயா மற்றும் நொந்தபுரி மாகாணங்களுக்கு பாடசாலை சுற்றுலாவிற்காக சென்ற பஸ்ஸில் 44 மாணவர்களை ஏற்றிச் சென்றதாக போக்குவரத்து அமைச்சர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பஸ்ஸில் பயணித்த 44 பேரில் தற்போது வரை 25 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பஸ் சாரதி உயிர் பிழைத்ததுடன் தப்பி ஓடியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles