NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இரு சந்தேகநபர்கள் கைது!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெறுவதற்கு உதவிய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபருக்கு தம்புள்ளை, பல்வெஹெரவில் உள்ள பொலிஸாரைத் தலைமறைவாகச் செய்வதற்கு உதவி செய்தமை மற்றும் பிரதான சந்தேகநபருக்கு தங்குமிட வசதிகளை வழங்கியமைக்காக இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் 38 மற்றும் 40 வயதுடைய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles