NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்..!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத BMW சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் , இன்று வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles