NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்கு நோய் பரவல் தீவிரம்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு நிலவக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 34, 906 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பதிவாகியுள்ளனர்.

அதன்படி, மேல் மாகாணத்தில் இதுவரையில் 14, 248 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற் கொண்டு டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles