ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்றைய தினம் (09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளரான 51 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்த இவர், நேற்று (9) இரவு முதலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.