NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் பிரசாரத்தின் போது தேசியக் கொடி மற்றும் மத சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு தடை..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தின் போது தேசியக் கொடி மற்றும் மத சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் பிரசாரத்தின் போது தடை செய்யப்பட்ட பொருட்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles