NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் முறைப்பாடுகள் 2027 ஆக அதிகரிப்பு..!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் மேலும் 132 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2027 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (04) வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 846 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1381 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், அதிகரித்து வரும் தேர்தல் புகார்களில் 1521 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு 706 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles