NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் நிலவிவரும் கடும் வெப்பம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இன்று வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (28) வெப்பச் சுட்டெண்  தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், நிழலைக் கண்டறியவும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களை கவனமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share:

Related Articles