NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிட்டம்புவயில் ஜீப் வண்டி மோதி ஒருவர் பலி..!

நிட்டம்புவ – திஹாரிய பகுதியில் இன்று (27) காலை கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 47 வயதுடைய கலகெடிஹேன, கலட்டுவாவ பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles