NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீதிமன்றங்களால் 12 பிடியாணைகள் – ஒருவர் கைது!

ஜாஎல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று நேற்று மாகவிட்ட பிரதேசத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளது.

சந்தேகநபர் கோனேவ, பண்டுகாபுர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சந்தேக நபருக்கு எதிராக வெலிசர, நீர்கொழும்பு, மதவாச்சி மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய நீதவான் நீதிமன்றங்களால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த சந்தேக நபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், ஜாஎல, நீர்கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், தவரக்குளம், கல்லஞ்சிய பொலிஸ் பிரிவுகளில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்ளை, வீடுகளை உடைத்து கொள்ளை, கூரிய ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்தியமை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

Share:

Related Articles