NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

மழை காரணமாக இன்று (25) காலை முதல் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நேற்று (24) இரவு முதல் கனமழை பெய்துள்ளதால் பாதைகள் வழுக்கும் நிலையிலுள்ளதால் வாகனச் சாரதிகள் கவனமாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles