NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பணிப்புறக்கணிப்பு காரணமாக நீர் விநியோகத்தில் தடை ஏற்படலாம்!

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாட்கள் தொடர்பான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாது என நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீர் விநியோகம் தடைப்படலாம் எனவும், இதற்கு முகாமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles