NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாதாளக் குழு உறுப்பினர்கள் நால்வர் கைது!

டுபாயை தளமாகக் கொண்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் தகவலின் பேரில், தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ வெளியேறும் பகுதிக்கு அருகில் வைத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு நாட்டு கைக்குண்டுகள் மற்றும் சுமார் ஐம்பது கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரை இலக்கு வைத்து மீகொட பிரதேசத்திற்குச் சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு ஒருவரையொருவர் அறிமுகம் இல்லை எனவும், டுபாயில் உள்ள பாதாள உலக தலைவரின் தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் வந்த வேனின் சாரதி ஒவ்வொரு இடத்திலிருந்தும் உரிய நபர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனமொன்றில் கொள்ளையிடும் திட்டம் தீட்டியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles