NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னார் மாவட்த்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது நிலவும் மழையுடனான வானிலையினால் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles