NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாரடைப்பினால் கொழும்பில் வாரத்திற்கு 15 பேர் உயிரிழப்பு..!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 90 வீதமான மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்போது முப்பது முதல் எண்பது வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Related Articles