NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு..!

முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயொருவர் இன்று(07) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக இராணுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேப்பாபிலவு பகுதியிலுள்ள ஆறாவது காலாட்படையில் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லான்ஸ் கோப்ரல் நிலையுடைய சிப்பாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது உயிரிழப்பு தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Share:

Related Articles