NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ் மாவட்டத்தில் பகுதி நேர வகுப்புகளுக்கு தடை ?

யாழ்.மாவட்டத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக மாலை வகுப்புகளை இடைநிறுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் உரிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி வகுப்புகளும் யாழ்.மாவட்ட செயலகத்திலும் வடமாகாண கல்வி அமைச்சிலும் பதிவு செய்யப்பட உள்ளன.

மேலதிக பயிற்சி வகுப்புகள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மேலதிக பயிற்சி வகுப்பு மேலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles