NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விறகு வெட்டச் சென்று காணாமல்போன நபர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹவா-எலியா தோட்ட பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விறகு தேடச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து, நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளார்.

நேற்று (21) முதல் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அங்கு, வயல் நடுவில் காணாமல் போனவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் ஒரு கோட் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் உத்தியோகபூர்வ நாய்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share:

Related Articles