NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிம்பு பட வேலையில் மும்முரம் காட்டும் தேசிங்கு பெரியசாமி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது புதிய படத்துக்கான கதைகள் தேர்வில் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ஒபலி என் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘பத்து தல’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ‘எஸ்.டி.ஆர். 48’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்காக நடிகர் சிம்பு தாய்லாந்தில் தற்காப்பு கலை பயின்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இப்படத்தின் லொக்கேஷன் தேடுதலில் மும்முரமாக இறங்கியுள்ளதாகவும் சில வாரங்களில் லொகேஷன் முடிவாகிவிடும் என்றும் ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles