NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான ரா.சங்கரன் காலமானார்!

பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான ரா.சங்கரன் வயது மூப்பு காரணமாக தனது 92ஆவது வயதில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான ரா.சங்கரன் வயது மூப்பு காரணமாக தனது 92ஆவது வயதில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

‘மௌன ராகம்’ படத்தில் ரேவதியின் தந்தை கதாபாத்திரத்தில் சந்திரமௌலியாக நடித்ததன் மூலம் சங்கரன் பிரபலமானார்.

வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் உள்ளிட்ட 8 படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார்.

ரா.சங்கரன் மறைவுக்கு பாரதிராஜா எக்ஸ் தள பக்கத்தில்,, “எனது ஆசிரியர் இயக்குனர் ரா.சங்கரன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share:

Related Articles