NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரவி மோகனுடன் இணையும் எ.ஜே சூர்யா..!!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகியவர்தான் ரவி மோகன். தொடர்ந்தும் வித்தியாசமான கதை கருக்களை எடுத்து நடிப்பதில் ஆர்வம்மிக்கவர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம்தான் காதலிக்க நேரமில்லை.

இதனை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்திலும் முக்கியமானதொரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் கணேஷ் கே பாபுவின் இயக்கத்தில் கராத்தே பாபு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனை தவிர்த்து தற்போது டிக்கிலான, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எதிர் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

குறித்த திரைப்படத்தில் எ. ஜே சூர்யா அவர்களும் இனைந்து முக்கியமானதொரு கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் மேலும் இக்கதையானது டபுள் ஹீரோ சப்ஜெக்டாக இருக்கலாம் என்கின்றனர். இத்தகவல் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

Share:

Related Articles