NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Poacher” Web தொடர் குறித்து நடிகர் மகேஷ்பாபு

சமீபகாலமாக வெளியாகி வரும் வெப் சீரிஸ்களில் திரைப்படங்களில் சொல்ல முடியாத விஷயங்களை துணிச்சலாக கூறி வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் வெளியான “Poacher” என்கிற Web தொடர் OTT தளத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தந்தங்களுக்காக யானைகள் கொடூரமாக கொல்லப்படுவதையும் அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் மையப்படுத்தி இந்த Web தொடர் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு இந்த வெப்சீரிஸை சமீபத்தில் பார்த்துள்ளார்,

இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“எப்படி ஒருவரால் இப்படி செய்ய முடிகிறது? அவர்களது கைகள் நடுங்கவில்லையா? போச்சர் வெப்சீரிஸை பார்த்து முடித்ததும் இதுபோன்ற கேள்விகள் தான் என் மனதில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

மேன்மை தாங்கிய இந்த உயிரினங்களை பாதுகாப்பதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles