NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேதனமின்றி மக்களுக்காகச் சேவையாற்றுவேன் – சஜித் பிரேமதாச

ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர், வேதனமின்றி மக்களுக்காகச் சேவையாற்றவுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவித சந்தேகமுமின்றி, ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கம் கதிர்காமம் உள்ளிட்ட புனித பூமிகளில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குகின்றது. இது வேதனைக்குரிய விடயமாகும்.

பொதுமக்களின் வரியினூடாக ஜனாதிபதிக்கான வேதனம் பெறுவது தமது எண்ணம் இல்லை.

அவ்வாறானவர்களிடம் இருந்து நாட்டை பொறுப்பேற்றும், இலங்கையைச் சிறந்த தரத்திற்கு முன்னேற்றுவதே தமது இலக்காகும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles