கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2023) பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.