(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
அந்நாட்டு ஜனாதிபதி முகமது பாசும் கைது செய்யப்பட்டார்.
இதற்கு ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உலக நாடுகளுக்கு நைஜர் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே டிசியானி தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, நைஜர் மக்கள் மீது சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தவும், நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் விரும்பும் அனைவரையும் தோற்கடிக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒற்றுமைக்காக நாங்கள் அழைக்கிறோம். எங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம். தேர்தலுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இராணுவ புரட்சியை அடுத்து நைஜருக்கான மின் வினியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.