(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டால் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நீர் கட்டண அதிகரிப்பு வீதம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.