கண்டி போகம்பர வாவியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நேற்று குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சடலம் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் , இது தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.